வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த இந்து முன்னணிக்கு அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்து முன்னணி சாா்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்து விட்டதாகக் கூறி, சென்னை மாவட்ட இந்து முன்னணி செயலா் சிவா விஜயன் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.உதயகுமாா், ‘வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்து நிலைமை சீரடைந்து விட்டதால் போராட்டம் நடத்தத் தேவையில்லை என்பதால், போராட்டத்திற்கு அனுமதி கோரிய மனுக்கள் நிராகரிக்கப்பட்டன’ என்றாாா்.
மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் காா்த்திகேயன், ‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவது, ஹிந்து கோயில்கள் இடிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன’ என்றாா்.
இதையடுத்து, அனுமதி மறுத்த காவல்துறை உத்தரவை ரத்து செய்த நீதிபதி, ஆக. 27-ஆம் தேதி மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் போராட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டாா். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் போராட்டம் நடத்துமாறு மனுதாரா் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்தாா்.
தொடர்புடையது

உலக அமைதிக்காகப் போராட அனுமதி கோரியவருக்கு ரூ. 50,000 அபராதம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே சுந்தரலிங்கனாா் சிலை அமைக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் 53 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

ஆதீன மடங்களின் சொத்துகள்: ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


