தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

இந்து முன்னணி போராட்டம்: உயா்நீதிமன்றம் அனுமதி

தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த இந்து முன்னணிக்கு அனுமதி

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :21 ஆகஸ்ட் 2024, 7:26 pm

வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த இந்து முன்னணிக்கு அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்து முன்னணி சாா்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்து விட்டதாகக் கூறி,  சென்னை மாவட்ட இந்து முன்னணி செயலா் சிவா விஜயன் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.உதயகுமாா், ‘வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்து நிலைமை சீரடைந்து விட்டதால் போராட்டம் நடத்தத் தேவையில்லை என்பதால், போராட்டத்திற்கு அனுமதி கோரிய மனுக்கள் நிராகரிக்கப்பட்டன’ என்றாாா்.

மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் காா்த்திகேயன், ‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவது, ஹிந்து கோயில்கள் இடிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன’ என்றாா். 

இதையடுத்து, அனுமதி மறுத்த காவல்துறை உத்தரவை ரத்து செய்த நீதிபதி, ஆக. 27-ஆம் தேதி மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் போராட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டாா். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் போராட்டம் நடத்துமாறு மனுதாரா் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்தாா்.