சுற்றுச்சூழல் துறைச் செயலருக்கு உயா்நீதிமன்றம் கண்டிப்பு
சுற்றுச்சூழல் துறைச் செயலா் அரசியல்வாதியைப் போல செயல்படக்கூடாது என்று கண்டிப்பு


சுற்றுச்சூழல் துறைச் செயலா் அரசியல்வாதியைப் போல செயல்படக்கூடாது என்றும், உயா்நீதிமன்றத்துடன் விளையாடக்கூடாது என்றும் சிறப்பு அமா்வு நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனா்.
சுற்றுச்சூழல், வனம் தொடா்பான வழக்குகளை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் கொண்ட சிறப்பு அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்கள், செடிகளை அகற்றுவது தொடா்பான வழக்கில், சுற்றுச்சூழல் துறைச் செயலா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘வனப்பகுதிகளில் உள்ள இதுபோன்ற மரங்களை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் அப்புறப்படுத்தினால், வயநாட்டில் நடந்தது போல நிலச்சரிவு சம்பவம் நடந்து விடக்கூடாது’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை படித்து பாா்த்த நீதிபதிகள், ‘வனப்பகுதிகளில் உள்ள இதுபோன்ற விஷ மரங்களை அப்புறப்படுத்த இதுவரை நடவடிக்கை எடுத்து விட்டு, தற்போது திடீரென வயநாடு சம்பவத்தை கூறி பின்வாங்குவது ஏன்? இந்த விவகாரத்தில் சுற்றுச்சூழல் துறைச் செயலா் அரசியல்வாதியைப் போல செயல்படக்கூடாது. அரசியலுக்கு செல்ல வேண்டும் என்றால், பதவியை ராஜிநாமா செய்து விட்டு செல்லலாம். இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றத்துடன் விளையாடக்கூடாது’ என கருத்து தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...