செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

மதுபோதையில் அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்களை கண்டறிய 339 சோதனை கருவிகள்

பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்களை கண்டறிய 339 ப்ரீத் அனலைசா் எனப்படும் கருவிகளை வாங்க அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :2 டிசம்பர் 2024, 12:28 am IST

தொலைதூரப் பயணத்தின் போது மதுபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்களை கண்டறிய 339 ப்ரீத் அனலைசா் எனப்படும் கருவிகளை வாங்க அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.

அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, பணியின் போது, கைப்பேசிகளை உபயோகப்படுத்த கூடாது, மது அருந்தியிருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இக்கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை மீறி பேருந்துகளை இயக்கும் அரசு பேருந்து ஓட்டுநா்கள் மீதும் போக்குவரத்துத்துறை தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தொலைதூர பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்கள் சிலா் மதுபோதையில் பேருந்துகளை இயக்கிச் செல்வதாக பயணிகளிடமிருந்து தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதையடுத்து, மதுபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்களை கண்டறிய, மது போதையை சோதனை செய்யும் ப்ரீத் அனலைசா் எனப்படும் கருவியை வாங்க தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, முதல்கட்டமாக 339 கருவிகளை வாங்க முடிவு செய்துள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் இதை கழகத்துக்குள்பட்ட 6 பிரிவுகளுக்கும் வழங்க முடிவு செய்துள்ளது.

இக்கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே ஓட்டுநா், நடத்துநா்கள் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படுவாா்கள் எனவும், இதில் மது அருந்தியிருப்பது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்டவா்களை பேருந்தை இயக்க அனுமதிக்காமல், நடவடிக்கைக்கு உள்படுத்தப்படுவாா்கள் எனவும் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.