மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வுமுதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் சந்திப்பு!போர்ப் பதற்றம்! ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!கண்ணியத்துடன் பேசுங்கள்: சட்டப்பேரவையில் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தல்பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!

நாட்டில் ஐபோன் தயாரிப்பை 25 சதவிகிதத்தில் இருந்து 35% ஆக உயர்த்த ஆப்பிள் முடிவு செய்துள்ளது குறித்து...

Apple iPhone production

ஆப்பிள் - எக்ஸ்

Published On :31 ஆகஸ்ட் 2026, 6:32 pm IST

அடுத்த 5 ஆண்டுகளில் 30 முதல் 35% ஐபோன் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. உலகளாவிய ஐபோன் உற்பத்தியில் 25% இந்தியாவில் நடக்கும் நிலையில், தற்போது அதனை உயர்த்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் 2031 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடக்கும் ஐபோன் உற்பத்தியின் மதிப்பு 25 பில்லியன் டாலரில் இருந்து 40 - 45 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஆப்பிள் ஐபோனுக்குத் தேவையான உதிரி பாகங்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரித்து வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 300 ஏக்கர் பரப்பளவில் ஐபோன் உதிரிபாக தயாரிப்பை மேற்கொண்டு வருகிறது. இதுமட்டுமின்றி அகமதாபாத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் மின்னணு உதிரி பாகங்கள் தயாரிப்பை விரிவுபடுத்த ஃபாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளது.

அதிகரிக்கும் ஐபோன் தயாரிப்பு

நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ஐபோன் உதிரி பாக உற்பத்தி அதிகரித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு 55 மில்லியன் ஐபோன்கள் அசெம்பிள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 36 மில்லியனாக இருந்த நிலையில், 53 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியச் செயல்பாடுகள் தற்போது ஐந்து முக்கிய ஒருங்கிணைப்பு ஆலைகளை உள்ளடக்கியுள்ளன. அவற்றில் மூன்று டாடா குழுமத்தாலும், இரண்டு ஃபாக்ஸ்கான் நிறுவனத்தாலும் நடத்தப்படுகின்றன. இவற்றுக்கு, வளர்ந்து வரும் சுமார் 45 உதிரிபாக விநியோகஸ்தர்களின் தளம் ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் மிகப்பெரிய பயனாளியாக ஆப்பிள் நிறுவனம் உள்ளது. இந்த ஐந்தாண்டு திட்டம் 2026 உடன் முடிவுக்கு வருகிறது. இதனை 2041 மார்ச் 31 வரை நீட்டிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இத்துறையை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 62,500 கோடி மதிப்பிலான புதிய ஐந்தாண்டுத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதன்கீழ், ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்வோருக்கான வரி விலக்குகள் 2041-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் தனது ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது.

Summary

Apple may shift 30-35% of global iPhone production to India in next 5 years

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.