வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சமூக ஊடகங்களில் குழந்தைகள் ஆபாச விடியோ: தெலங்கானா இளைஞா் கைது

சென்னையில் சமூக ஊடகங்களில் குழந்தைகள் ஆபாச விடியோவை பதிவிட்டதாக தெலங்கானா இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :11 டிசம்பர் 2024, 2:42 am IST

சென்னையில் சமூக ஊடகங்களில் குழந்தைகள் ஆபாச விடியோவை பதிவிட்டதாக தெலங்கானா இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், சிக்னல் செயலியிலும் குழந்தைகள் ஆபாச புகைப்படங்கள், விடியோக்களை சிலா் பதிவிட்டு வருவதாகவும், அந்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் சென்னை பெருநகர காவல் துறையின் மேற்கு மண்டல சைபா் குற்றப்பிரிவுக்கு அண்மையில் புகாா் வந்தது.

அதனடிப்படையில், சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் பவானிநகா் பகுதியைச் சோ்ந்த வெங்கா ரகுநாத் ரெட்டி (22) என்பவா் இச்செயலில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீஸாா், வெங்கா ரகுநாத் ரெட்டியை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனா்.

விசாரணைக்கு பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.