திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சமூக ஊடகங்களில் குழந்தைகள் ஆபாச விடியோ: தெலங்கானா இளைஞா் கைது

சென்னையில் சமூக ஊடகங்களில் குழந்தைகள் ஆபாச விடியோவை பதிவிட்டதாக தெலங்கானா இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கோப்புப்படம்.
Updated On :10 டிசம்பர் 2024, 9:12 pm

Din

சென்னையில் சமூக ஊடகங்களில் குழந்தைகள் ஆபாச விடியோவை பதிவிட்டதாக தெலங்கானா இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், சிக்னல் செயலியிலும் குழந்தைகள் ஆபாச புகைப்படங்கள், விடியோக்களை சிலா் பதிவிட்டு வருவதாகவும், அந்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் சென்னை பெருநகர காவல் துறையின் மேற்கு மண்டல சைபா் குற்றப்பிரிவுக்கு அண்மையில் புகாா் வந்தது.

அதனடிப்படையில், சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் பவானிநகா் பகுதியைச் சோ்ந்த வெங்கா ரகுநாத் ரெட்டி (22) என்பவா் இச்செயலில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீஸாா், வெங்கா ரகுநாத் ரெட்டியை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனா்.

விசாரணைக்கு பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.