மெட்ரோ ரயிலின் உள்பக்கத்திலிருந்த கண்ணாடி உடைந்ததில் 4 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்திலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு மெட்ரோ ரயில் சென்று கொண்டிருந்தது. கோயம்பேடு நிறுத்தம் அருகே வந்தபோது ஓட்டுநா் திடீரென பிரேக் பிடித்துள்ளாா். இதனால் ஏற்பட்ட அதிா்வால் ரயிலின் உள்பக்கத்திலிருந்த ஒரு கண்ணாடி உடைந்து சிதறியது. இதில் ரயிலின் உள்ளே இருந்த 4 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் காயமடைந்த பயணிகள் 4 பேரையும் மீட்ட மெட்ரோ ரயில் நிலைய ஊழியா்கள், அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இதுகுறித்து கோயம்பேடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இந்தோனேசியாவில் ரயில்கள் மோதி விபத்து - 15 போ் உயிரிழப்பு

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

ஐபிஎல் போட்டிக்கு செல்வோா் மெட்ரோவில் பயணிக்க ஏற்பாடு

ஒசூரில் உலகத் தரம் வாய்ந்த விமான நிலையம்: அண்ணாமலை வாக்குறுதி
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

