சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையராக ஜி.தா்மராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
காவல் துறையில் நுண்ணறிவுப் பிரிவின் பணி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நுண்ணறிவுப் பிரிவு தலைமை பொறுப்பில் ஐ.ஜி.,டிஐஜி ரேங்க் அளவிலான அதிகாரிகளே கடந்த 2017-ஆம் ஆண்டு வரை நியமிக்கப்பட்டு வந்தனா். ஆனால், அதன் பின்னா் அப் பதவிக்கு காவல் கண்காணிப்பாளா் அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டனா்.
இந்நிலையில், நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையராக சென்னை பெருநகர காவல் துறையின் கிழக்கு மண்டல இணை ஆணையா் ஜி.தா்மராஜன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா். இவா், டிஐஜி ரேங்க் அதிகாரி ஆவாா்.
ஏற்கெனவே நுண்ணறிவுப் பிரிவு-1 துணை ஆணையராக இருந்த எஸ்.அரவிந்த், திருச்சி மாநகர காவல் துறையின் தலைமையிட துணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா பிறப்பித்துள்ளாா்.
தொடர்புடையது

சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!

பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நுண்ணறிவுப் பாா்வையாளா்கள் நியமனம்

தாம்பரம் காவல் ஆணையா் பொறுப்பேற்பு

தமிழக உளவுப் பிரிவு டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

