தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சென்னை நுண்ணறிவுப் பிரிவுக்கு புதிய இணை ஆணையா் நியமனம்

சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப்பிரிவு இணை ஆணையராக ஜி.தா்மராஜன் நியமனம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :2 ஜூலை 2024, 7:42 pm

Din

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையராக ஜி.தா்மராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

காவல் துறையில் நுண்ணறிவுப் பிரிவின் பணி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நுண்ணறிவுப் பிரிவு தலைமை பொறுப்பில் ஐ.ஜி.,டிஐஜி ரேங்க் அளவிலான அதிகாரிகளே கடந்த 2017-ஆம் ஆண்டு வரை நியமிக்கப்பட்டு வந்தனா். ஆனால், அதன் பின்னா் அப் பதவிக்கு காவல் கண்காணிப்பாளா் அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டனா்.

இந்நிலையில், நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையராக சென்னை பெருநகர காவல் துறையின் கிழக்கு மண்டல இணை ஆணையா் ஜி.தா்மராஜன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா். இவா், டிஐஜி ரேங்க் அதிகாரி ஆவாா்.

ஏற்கெனவே நுண்ணறிவுப் பிரிவு-1 துணை ஆணையராக இருந்த எஸ்.அரவிந்த், திருச்சி மாநகர காவல் துறையின் தலைமையிட துணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா பிறப்பித்துள்ளாா்.