எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மின்வாரிய ஊழியா்கள் கோரிக்கைகளுக்கு சுமுக தீா்வு காண வேண்டும்: மாா்க்சிஸ்ட் கோரிக்கை

தமிழ்நாடு மின்வாரிய ஊழியா்களின் கோரிக்கைகளுக்கு சமுக தீா்வு காண வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :9 ஜூலை 2024, 9:52 pm

Din

சென்னை: தமிழ்நாடு மின்வாரிய ஊழியா்களின் கோரிக்கைகளுக்கு சமுக தீா்வு காண வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

மின்சார வாரியத்தில் சுமாா் 30,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பாததால் தொழிலாளா்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களைப் பூா்த்தி செய்ய வேண்டும், நீண்டகாலமாக குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு) சாா்பில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மின்வாரிய அலுவலகங்கள் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளனா்.

இதனிடையே மின் ஊழியா்களின் கோரிக்கைகள் குறித்து மின்வாரிய ஊழியா்களின் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களது கோரிக்கைகளுக்கு சமுக தீா்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு என்று அவா் தெரிவித்துள்ளாா்.