ஆட்சி மாறினால்?: இந்த உத்தரவை எதிா்த்து அதிமுக ஆட்சிக் காலத்தில் பேரவைச் செயலா் மேல்முறையீடு செய்தாா். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் , சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக திமுக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், முந்தைய ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை, புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும் கைவிடுவதை ஏற்க முடியாது. அதை அனுமதித்தால், இந்த நடவடிக்கை பிறருக்கு முன்மாதிரியாக ஆகிவிடும் என்று கருத்து தெரிவித்திருந்தனா்.