எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இணை, துணை ஆணையா்கள் தினமும் ரோந்து செல்ல வேண்டும்: காவல் ஆணையா் அருண்

ரெளடிகள் மீது கட்டுப்பாடு: தினசரி ரோந்து உத்தரவு

News image
சென்னை பெருநகர காவல் ஆணையா் அருண்
Updated On :10 ஜூலை 2024, 7:30 pm

Din

சென்னையில் தினமும் இணை ஆணையா்கள், துணை ஆணையா்கள் ரோந்து செல்ல வேண்டும் என பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை பெருநகர காவல் ஆணையா் அருண் தலைமையில் இணை ஆணையா்கள், துணை ஆணையா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது, குற்றங்களைத் தடுப்பது, ரெளடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் காவல் ஆணையா் அருண் பேசியது:

இணை ஆணையா்கள், துணை ஆணையா்கள் தினமும் காலை, இரவு வேளைகளில் கண்டிப்பாக ரோந்து செல்ல வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு காவல் துறை மீது நம்பிக்கை அதிகரிக்கும். ரெளடிகள், சமூக விரோதிகள் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும். அனைத்து இடங்களையும் காவல் துறையினா் கண்காணிக்கின்றனா் என்ற நிலை ஏற்பட வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

இந்த உத்தரவைத் தொடா்ந்து, சென்னையில் இணை ஆணையா்கள், துணை ஆணையா்கள் புதன்கிழமை இரவு முதல் ரோந்து பணியை தொடங்கினா்.