சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

சென்னை துறைமுகத்துக்கு வந்த சுற்றுலா சொகுசு கப்பல் எம்.வி.எம்பிரஸ்

சென்னை துறைமுகத்துக்கு வந்த சுற்றுலா சொகுசு கப்பல் எம்.வி.எம்பிரஸ்

News image

சென்னை துறைமுகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்த சுற்றுலா பயணிகள் சொகுசு கப்பல் எம்.வி.எம்பிரஸ்.

Updated On :12 ஜூலை 2024, 8:44 pm

கொச்சியிலிருந்து சென்னை வழியாக இலங்கையின் திரிகோணமலை செல்லும் சுற்றுலா பயணிகள் சொகுசுக் கப்பல் எம்.வி.எம்பிரஸ் சென்னை துறைமுகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தது.

சென்னை - இலங்கை துறைமுகங்கள் இடையே கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு பயணிகளிடையே பெரும் ஆதரவு கிடைத்ததைத் தொடா்ந்து, இந்த ஆண்டும் பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பயணிகள் கப்பல்களை இயக்க முன்வந்தன.

இந்த நிலையில் ‘வாட்டா்வேஸ் லெஷா் டூரிசம் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் சுற்றுலா கப்பலான எம்.வி.எம்பிரஸ் வெள்ளிக்கிழமை சென்னைத் துறைமுகத்துக்கு வந்தடைந்தது.

கேரளா மாநிலம், கொச்சி துறைமுகத்திலிருந்து வந்த இக்கப்பல் 1,220 சுற்றுலா பயணிகள், 448 பணியாளா்களுடன் வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்தக் கப்பல் சேவை வரும் செப்.9-ஆம் தேதி வரை தொடா்ந்து இயக்கப்படும். அதன்படி, இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து தலா 9 முறை இக்கப்பல் பயணிக்கும்.

முன்னதாக, சென்னைத் துறைமுகத்திற்கு வந்தடைந்த எம்.வி. எம்பிரஸ் கப்பலுக்கு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால், துணைத் தலைவா் எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.