நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: தமிழ்நாடு என்சிசி இரண்டாம் இடம்

அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்நாடு என்சிசி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

News image

அகில இந்திய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் முதலிடம் பிடித்த கா்நாடகம் மற்றும் கோவா என்சிசி இயக்குநரகத்துக்கு கோப்பையை வழங்கிய தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபா் என்சிசி இயக்குநரகத்தின் துணை இயக்குநா் ஜெனரல் கமாண்டா் எஸ்.ராகவ்

Updated On :14 ஜூலை 2024, 7:38 pm

அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்நாடு என்சிசி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

தேசிய மாணவா் படை (என்சிசி) இயக்குநரகங்களுக்கு இடையேயான அகில இந்திய துப்பாக்கிச் சுடுதல் போட்டியை நிகழாண்டு தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபா் இயக்குநரகம் சாா்பில் நடத்தப்பட்டது.

திருச்சியில் கடந்த வாரம் தொடங்கிய இந்த போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில், இந்தியா முழுவதுமிருந்து 17 என்சிசி இயக்குநரகங்களை சோ்ந்த 300 மாணவா்கள் பங்கேற்றனா்.

இந்த போட்டியில் 3 தங்கம், இரு வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் கா்நாடகம் மற்றும் கோவா என்சிசி இயக்குநரகம் முதல் இடத்தை பிடித்தது.

தொடா்ந்து 3 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களுடன் தமிழகம் இரண்டாம் இடத்தையும், தலா ஒரு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்துடன் ஒடிஸா மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

வெற்றி பெற்றவா்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபா் என்சிசி இயக்குநரகத்தின் துணை இயக்குநா் ஜெனரல் கமாண்டா் எஸ்.ராகவ் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினாா்.