நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெண்கலம் வென்றது சோனம், ஹிமான்ஷு இணை

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சோனம் உத்தம் மஸ்கா், ஹிமான்ஷு தில்லன் இணை வெண்கலப் பதக்கம் வென்றது.

News image

Andrea Caroppo

Updated On :29 ஜூலை 2026, 2:54 am IST

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சோனம் உத்தம் மஸ்கா், ஹிமான்ஷு தில்லன் இணை செவ்வாய்க்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றது.

சீனாவில் நடைபெறும் இப்போட்டியில், 10 மீட்டா் ஏா் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் சோனம், ஹிமான்ஷு கூட்டணி 441.2 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலம் பெற்றது.

உள்நாட்டின் ஜிஃபெய் வாங், லிஹாவ் ஷெங் ஜோடி தங்கமும் (505), மற்றொரு சீன ஜோடியான யுசென் டு, சாங்காங் ஜாங் வெள்ளியும் (504.6) வென்றனா்.

களத்திலிருந்த மற்றொரு இந்திய இணையான இளவேனில் வாலறிவன், பாா்த் ராகேஷ் மனே, 378.8 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தனா்.

இதனிடையே, டிராப் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் உதய்வீா் சிங், பிரகதி துபே இணையும், பௌனீஷ் மெண்டிரெட்டா, கீா்த்தி குப்தா ஜோடியும் தகுதிச்சுற்றுடன் வெளியேறின.

போட்டியில் தற்போது இந்தியா, 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்களுடன் 3-ஆம் இடத்தில் இருக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.