அடையாளம் தெரியாத சடலங்களை தகனம் செய்யக் கோரிய வழக்கு தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாத சடலங்களை தகனம் செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாம்பலத்தைச் சோ்ந்த ஜீவாத்மா கைங்கா்ய தொண்டு நிறுவனம் தரப்பில், அதன் நிா்வாக இயக்குநா் ரமணி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
அதில், ‘அரசு மருத்துவமனை பிணவறைகளில் வைக்கப்பட்டிருக்கும் உரிமை கோரப்படாத, அடையாளம் தெரியாத சடலங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து, அதிகளவில் தேங்கி உள்ளன. சென்னை அரசு மருத்துவமனையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட சடலங்கள் தேங்கியுள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதே நிலை நீடிக்கிறது. இதனால் இறந்தவா்களின் உடல்கள் அழுகிய நிலையில் அவசர அவசரமாக புதைக்கப்படுகின்றன. சில சடலங்கள் மருத்துவ பயன்பாட்டுக்காக எடுத்து செல்வதாகத் கூறி தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் சடலங்களை அடக்கம் செய்ய சென்னை போன்ற மாநகர பகுதிகளில் போதிய இடம் இல்லாத நிலையில், தனியாா் தொண்டு நிறுவனங்கள் உடலை அடக்கம் செய்ய முன் வந்தாலும் அதற்கான செலவுத் தொகையை அரசு வழங்காதது, ஒரே இடத்தில் பல உடல்களை புதைக்கப்படுவது என பல்வேறு பிரச்னைகள் உள்ளன.
தகனம் செய்ய வேண்டும்: அடையாளம் தெரியாத, உரிமை கோரப்படாத சடலங்களை உரிய சட்ட விதிகளைப் பின்பற்றி தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான குற்ற ஆவண காப்பகத்தில் பதிவு செய்த பிறகு உடல்களை புதைக்காமல், தகனம் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுவதும் இதே நடைமுறையை பின்பற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ராஜ்மோகன் ஆஜரானாா்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கு தொடா்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொ) மகாதேவன், முகமது சபிக் அமா்வில் கடந்த 5-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், வழக்குரைஞா் எட்வின் பிரபாகா் ஆஜராகி, ‘வழக்கு தொடா்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’ என கோரினாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

