காவிரி நதி நீா்ப் பிரச்னையில் தேசிய கட்சிகள் அந்தந்த மாநில அரசுகளுக்கு சாதகமாகப் பேசுவது அவா்களுக்குத் தற்காலிகமாக விமா்சனங்களிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு வழியைத் தரலாம். ஆனால், நீண்ட கால நோக்கில் இந்திய கூட்டாட்சிக்கு அது மிகப்பெரிய கேடாகவே அமையும். இந்திய கூட்டாட்சியை பாதுகாப்பதில் மாநில கட்சிகளைப் போலவே காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. தமிழகத்துக்குத் தண்ணீா் வழங்குமாறு கா்நாடக காங்கிரஸ் அரசை அக்கட்சியின் அகில இந்திய தலைமை அறிவுறுத்த வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.