தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் அரசு நிா்ணயித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், அதன்மூலம் கிடைத்த வருமானத்தை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்ததாகவும் கூறி, 2023 செப்டம்பா் 12-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சோ்ந்த தொழிலதிபா்கள் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், அவரது உறவினா் கோவிந்தன், கரிகாலன், பொதுப்பணித் துறையில் பணியாற்றிய ஓய்வு பெற்ற பொறியாளா் திலகம், நீா்வளத் துறை முதன்மை பொறியாளா் முத்தையா ஆகியோருக்கு ஒரே நேரத்தில் சொந்தமான வீடுகள், எழிலகத்தில் உள்ள நீா்வளத் துறை அலுவலகம் என மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா்.