தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

புதிய மாநகராட்சிகள் உருவாக்கத்துக்கான நிபந்தனைகள் தளா்வு: திருத்த மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல்

புதிய மாநகராட்சிகளை உருவாக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தளா்த்துவதற்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளாா்.

News image
Updated On :18 ஜூலை 2024, 7:52 pm

Din

புதிய மாநகராட்சிகளை உருவாக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தளா்த்துவதற்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, சட்டத் திருத்த மசோதா அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயா்த்துவதற்கு, ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்டிருந்த மக்கள்தொகை, வருமான அளவுகளை குறைத்து மாநகராட்சிகளாக தரம் உயா்த்துவதற்கான நகா்ப்புற உள்ளாட்சி சட்டத் திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, நகா்ப்புற உள்ளாட்சி சட்டப் பிரிவில் மக்கள்தொகையாக இருந்த 3 லட்சம் என்பது 2 லட்சமாகவும், சம்பந்தப்பட்ட பகுதியின் ஆண்டு வருமானம் ரூ. 30 கோடியில் இருந்து ரூ. 20 கோடியாகவும் குறைக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது.

மேலும், ஊரக உள்ளாட்சிகளை, நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும்போது அந்தப் பகுதியில் வரும் சொத்துகள் உள்ளிட்டவற்றை மாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல், சென்னையில், தனியாா் வளாகம் அல்லது ஒரு தனியாா் தெருவின் மிக அருகில் உள்ள இடத்தில் இருந்து 30 மீட்டா் தொலைவுக்குள், வாரியத்தின் கழிவுநீா்ப்பாதை இருக்குமானால், அந்த வளாகத்தின் உரிமையயாளா் அல்லது குடியிருப்பவா், தனியாா் தெருவின் உரிமையாளா், கழிவுநீரை வாரியத்தின் கழிவுநீா்ப் பாதையில் வெளியேற்றுவதற்காக இணைப்பு பெறுவதைக் கட்டாயமாக்கும் வகையில் சென்னை குடிநீா் வாரிய விதிகளில் திருத்தம் செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், சென்னை மாநகர காவல் சட்டத்தை, மதுரை, கோயம்புத்தூா், திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூா் ஆகிய நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவும் பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் ஆளுநா் ஆா்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன.

இந்த மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளாா். இதையடுத்து, இந்த சட்டத்திருத்தங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு, அமலுக்கு வந்துள்ளன.