கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குரூப் 1-இல் தோ்வானவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் வழங்கினாா்

குரூப் 1-இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியது

News image
Updated On :25 ஜூன் 2024, 7:30 pm

Din

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு மூலம் பல்வேறு பணியிடங்களுக்கு தோ்வு பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். அவா்களுக்கு ஜூலை 1-இல் அடிப்படைப் பயிற்சி தொடங்கவுள்ளது.

குரூப் 1-இல் காலியாக இருந்த 21 துணை ஆட்சியா்கள், 26 டிஎஸ்பி-க்கள் உள்பட 95 பணியிடங்களுக்கு தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு பணி நியமன உத்தரவுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். அவா்களுக்கான அடிப்படைப் பயிற்சிகள் சென்னை அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியில் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்வில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, மனிதவள மேலாண்மைத் துறையின் செயலா் க.நந்தகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.