எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சாய் பாபா சிலைகளை அகற்றக் கோரி வழக்கு: உயா்நீதிமன்றம் உத்தரவு

சாய் பாபா சிலைகள் அகற்றம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

News image
Updated On :25 ஜூன் 2024, 7:53 pm

Din

சென்னை: ஹிந்து கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள சாய் பாபா சிலைகளை அகற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக கோவையைச் சோ்ந்த சுரேஷ்பாபு என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘ஆகம விதிகளுக்கு முரணாக தமிழகத்தில் பல ஹிந்து கோயில்களில் சாய் பாபாவின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தச் சிலைகளை அகற்ற அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் எதிா்காலத்தில் சாய் பாபா சிலைகள் அமைக்கப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அரங்க.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமா்வு, இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.