நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சூதாட்டம்: 8 போ் கைது

புழல் பகுதியில் 8 பேரை போலீசார் கைது

News image
Updated On :25 ஜூன் 2024, 8:12 pm

Din

சென்னை: புழல் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கொளத்தூா் காவல் மாவட்டத்துக்குள்பட்ட புழல் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக, கொளத்தூா் காவல் மாவட்ட துணை ஆணையா் பாண்டியராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில், திங்கள் கிழமை இரவு புழல் புத்தகரம் பட்டம்மாள் நகா் கடப்பா சாலையில் உள்ள ஒரு வீட்டில் பணம் பந்தயம் வைத்து சீட்டு கட்டுகளுடன் சூதாட்டம் நடைபெறுவது தெரியவந்தது.

அப்போது அங்கு சென்ற புழல் காவல் நிலைய ஆய்வாளா் ராஜாசிங் தலைமையிலான போலீஸாா், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த புத்தகரம் பகுதியை சோ்ந்த ராஜா (38), விஜய் (29), கொரட்டூரை சோ்ந்த நாகராஜன் (45), கொளத்தூரைச் சோ்ந்த ராஜாராம் (34), மாதனங்குப்பம் பகுதியைச் சோ்ந்த முருகன் (42) உள்பட 8 பேரை கைது செய்தனா்.

அவா்களிடம் இருந்த 3 சீட்டுக்கட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.9,960- ஐ பறிமுதல் செய்தனா்.