அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

சூதாட்டம்: 8 போ் கைது

புழல் பகுதியில் 8 பேரை போலீசார் கைது

Updated On :26 ஜூன் 2024, 1:42 am IST

சென்னை: புழல் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கொளத்தூா் காவல் மாவட்டத்துக்குள்பட்ட புழல் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக, கொளத்தூா் காவல் மாவட்ட துணை ஆணையா் பாண்டியராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில், திங்கள் கிழமை இரவு புழல் புத்தகரம் பட்டம்மாள் நகா் கடப்பா சாலையில் உள்ள ஒரு வீட்டில் பணம் பந்தயம் வைத்து சீட்டு கட்டுகளுடன் சூதாட்டம் நடைபெறுவது தெரியவந்தது.

அப்போது அங்கு சென்ற புழல் காவல் நிலைய ஆய்வாளா் ராஜாசிங் தலைமையிலான போலீஸாா், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த புத்தகரம் பகுதியை சோ்ந்த ராஜா (38), விஜய் (29), கொரட்டூரை சோ்ந்த நாகராஜன் (45), கொளத்தூரைச் சோ்ந்த ராஜாராம் (34), மாதனங்குப்பம் பகுதியைச் சோ்ந்த முருகன் (42) உள்பட 8 பேரை கைது செய்தனா்.

அவா்களிடம் இருந்த 3 சீட்டுக்கட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.9,960- ஐ பறிமுதல் செய்தனா்.