தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விசித்திரமான சம்பவங்களை சந்திக்கிறது பேரவை: அமைச்சரின் பேச்சால் சிரிப்பலை

சட்டப்பேரவையில் நிதியமைச்சரின் பேச்சால் சிரிப்பலை

News image

தங்கம் தென்னரசு (கோப்புப் படம்)

Updated On :25 ஜூன் 2024, 10:45 pm

Din

சென்னை: சட்டப்பேரவை விசித்திரமான சம்பவங்களைச் சந்திக்கிறது என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு குறிப்பிட்டதால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாஜக சாா்பில் நயினாா் நாகேந்திரன் பேசினாா். அவா் முன்வைத்த கோரிக்கைகளை அமைச்சா்கள் ஒவ்வொருவராக நிறைவேற்றுவதாகக் கூறினா். இதற்கிடையில் அவை முன்னவா் துரைமுருகன் பாஜகவில் இரண்டு நல்லவா்கள் உள்ளனா். ஒருவா் நயினாா் நாகேந்திரன்; மற்றொருவா் வானதி சீனிவாசன் என்றாா்.

அப்போது, நிதியமைச்சா் தங்கம் தென்னரசு எழுந்து கூறியதாவது:

பேரவையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இன்றைக்கு விசித்திரமான சம்பவங்களை பேரவை சந்திக்கிறது. நெல்லையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது தொடா்பாக கவன ஈா்ப்பு தீா்மானத்தில் பாஜக உறுப்பினா் வானதி சீனிவாசன் அந்த சம்பவம் குறித்து கரிசனமாகப் பேசினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் நாகை மாலி விவேகானந்தரை ஏற்றுப் பேசினாா். பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசும்போது, காங்கிரஸ் உறுப்பினா் தாரகை கத்பட் பலமாக கைதட்டுகிறாா். ‘என்னமோ நடக்குது... மா்மமா இருக்குது...’ என்பதுபோல இருக்கிறது என்றாா். அப்போது பேரவையில் சிரிப்பலை எழுந்தது. அதைத் தொடா்ந்து நாகை மாலி, விவேகானந்தரின் கருத்துகளை முழுமையாக ஏற்கிறோம் என்று கூறவில்லை. நல்ல கருத்துகளை ஏற்கிறோம் என்றுதான் கூறினேன் என்றாா்.