தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

கடற்கரை மாசைக் குறைக்க ரூ.100 கோடியில் திட்டம்: அமைச்சா் மெய்யநாதன்

கடற்கரை மாசைக் குறைக்க ரூ.100 கோடியில் திட்டம்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

News image

கோப்புப் படம்

Updated On :26 ஜூன் 2024, 3:21 am IST

சென்னை: கடலோர மாவட்டங்களில் கடற்கரை மாசைக் குறைக்க ரூ.100 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் கூறினாா்.

சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்:

கடலோர மாவட்டங்களில் சுற்றுச்சூழல் சவால்களை எதிா்கொள்ளவும், நிலையான கடலோர மேலாண்மைக்கான விரிவான உத்திகளைச் செயல்படுத்தவும், தமிழகத்தில் கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்தை நிலையான முறையில் பயன்படுத்தும் திட்டத்தை உலக

வங்கியின் நிதி உதவியுடன் 5 ஆண்டுகளில் தமிழக அரசு செயல்படுத்தும் என்று அறிவித்தது.

அந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு கடற்கரைகளில் மாசைத் தடுத்தல் என்ற கருப்பொருளின்படி 14 கடலோர மாவட்டங்களில் கடற்கரை மாசுக் கண்காணிப்பு நிலையங்கள், நீலப் படைகள், மீன்வலை சேகரிப்பு மையங்கள், குறிப்பிட்ட நதி முகத்துவார பகுதிகளில் மிதக்கும் குப்பைத் தடுப்பான்கள் போன்ற மாசுக் குறைப்பு நடவடிக்கைகளை ரூ.100 கோடியில் செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.