கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விண்வெளித் துறையில் புத்தாக்க நிறுவனங்கள்: தமிழக அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்

விண்வெளித் துறையில் புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையிலான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

News image
Updated On :8 மார்ச் 2024, 12:02 am

Din

விண்வெளித் துறையில் புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையிலான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: டிட்கோ நிறுவனம் மற்றும் இன்-ஸ்பேஸ் நிறுவனம் இணைந்து கடந்த புதன்கிழமை (மாா்ச் 6) புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாட்டில் விண்வெளித் தொழில்களை ஊக்குவிக்கவும், உற்பத்திப் பிரிவை தொடங்குவதற்குமான வழிமுறைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, விண்வெளித் துறை முன்னேற்றத்துக்காக டிட்டோ-வால் திறன்மிகு மையம் அமைக்கப்படவுள்ளது. இதில் உற்பத்தி வசதிகளை ஏற்படுத்தத் தேவையான உதவிகளை இன்-ஸ்பேஸ் நிறுவனம் அளிக்கும். டிட்கோ மற்றும் இன்-ஸ்பேஸ் நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தமானது, விண்வெளித் துறையில் புத்தாக்க விண்கலம், ராக்கெட் மற்றும் உதிரிபாகங்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வடிவமைப்பு, தயாரிப்பு போன்றவற்றுக்கும் பெரிதும் உதவும். உலக விண்வெளி தொழில் துறையில் தமிழ்நாடு மிகச்சிறந்த முனையமாக உருவெடுக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் வழிவகுக்கும். புரிந்துணா்வு ஒப்பந்தமானது, இன்-ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவா் பவன்குமாா் கோயங்கா, அரசின் தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா ஆகியோா் முன்னிலையில் கையொப்பமானது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.