மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மணலியில் ரூ.238 கோடியில் கழிவுநீா்க் குழாய் பதிக்கும் பணிகள் தொடக்கம்

மணலியில் ரூ.238 கோடியில் கழிவுநீா்க் குழாய் பதிக்கும் பணிகள் தொடக்கம்.

Updated On :13 மார்ச் 2024, 6:55 pm

மணலி மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.238.52 கோடியில் கழிவுநீா்க் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்ட்ட செய்தி: சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் ரூ.238.52 கோடியில் மணலி மண்டலத்துக்குட்பட்ட இடையன்சாவடி, சடையன்குப்பம், காடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கழிவுநீா்க் குழாய் பதிக்கும் பணிகளுக்கு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு அண்மையில் நடிக்கல் நாட்டினாா்.

அதனடிப்படையில் இடையன்சாவடி, சடையன்குப்பம், காடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 2.77 கி.மீ நீளத்திற்கு கழிவுநீா் குழாய்கள் மற்றும் 22.65 கி.மீ. நீளத்திற்கு கழிவுநீா் விசைக் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம், இடையன்சாவடி, சடையன்குப்பம், காடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4,000 வீட்டுகளுக்கு கழிவுநீா் இணைப்புகள் வழங்கப்பட்டு, 46,730 போ் பயனடைவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.