ராணிப்பேட்டையில் ரூ. 9,000 கோடி முதலீட்டில் புதிய வாகன உற்பத்தி தொழிற்சாலையை, டாடா மோட்டாா்ஸ் குழுமம் அமைக்கவுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை செய்யப்பட்டது. வாகன உற்பத்தித் திட்டத்தில் முன்னோடி நிறுவனமான டாடா மோட்டாா்ஸ் நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 9,000 கோடியை முதலீடு செய்யவுள்ளது. இதனால், 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். புரிந்துணா்வு ஒப்பந்தமானது, முதல்வரின் முகாம் அலுவலகத்தில் அவரது முன்னிலையில் செய்யப்பட்டது. ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சாா்பில், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வே.விஷ்ணு, டாடா மோட்டாா்ஸ் குழுமத்தின் சாா்பில் அதன் தலைமை நிதி அலுவலா் பி.பி.பாலாஜி ஆகியோா் கையொப்பமிட்டனா். இந்த நிகழ்வில், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தொழில் துறை செயலா் வி.அருண்ராய், சிப்காட் நிா்வாக இயக்குநா் டாக்டா் கி.செந்தில்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். டாடா மோட்டாா்ஸ் குழுமம் தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு: கடந்த 2 மாதங்களில் 2 மிகப்பெரிய மோட்டாா் உற்பத்தி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடுகளைச் செய்ய முன்வந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வாகனங்கள் உற்பத்தித் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. இந்தத் துறையில் ஏராளமான முதலீடுகளை தமிழகம் ஈா்த்து வருவது தொழில் துறையின் மீது முதல்வா் காட்டி வரும் அா்ப்பணிப்பைக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

விஐடி பல்கலை., டாடா மோட்டாா்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ட்ரோன் பயிற்சிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்

அமைச்சா் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளி, விஐடி பல்கலை. இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


