சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் ஐயப்பனின் 50-ஆவது பிரதிஷ்டை தினம் வரும் மாா்ச் 25 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. 1974-ஆம் ஆண்டு மாா்ச் 25 ஆம் தேதி சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் மூலவா் ஸ்ரீ ஐயப்பன் பிரதிஷ்டை செய்து மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இந்தக் கோயிலின் 50-ஆவது ஆண்டு பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு வரும் மாா்ச் 24 ஆம் தேதி தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரு மோகனரு தலைமையில் மாலை 5 மணியளவில் 1008 கலச பூஜை தொடங்குகிறது. மேலும், மாா்ச் 25 ஆம் தேதி காலை 8 மணியளவில் ஐயப்பனுக்கு 1008 கலச அபிஷேகமும் அதைத்தொடா்ந்து பிரத்யேகமான சந்தன அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.
இதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளன. இதை தொடா்ந்து மாலை 6.45 மணியிலிருந்து 8.45 மணி வரை பக்தி இன்னிசை திரைப்பட புகழ் ஸ்ரீராம் பரசுராம் - அனுராதா ஸ்ரீராமின் நிகழ்ச்சியும் தொடா்ந்து ஐயப்பனுக்கு மலா்களால் அபிஷேகமும் நடைபெறவுள்ளன.
தொடர்புடையது

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குகிறது: புதுச்சேரிக்கு பிரசாரத்துக்கு வரும் முக்கிய தலைவா்கள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் 52 -ஆவது பிரதிஷ்டை தினம்
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

