மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: நீச்சல் குளத்தில் மூழ்கி இளம் பெண் சாவு

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: நீச்சல் குளத்தில் மூழ்கி இளம் பெண் சாவு

Updated On :24 மார்ச் 2024, 12:04 am

சென்னை அருகே முட்டுக்காட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, நீச்சல் குளத்தில் மூழ்கி இளம் பெண் உயிரிழந்தாா். சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த சீனிவாசன் ராஜசேகரன் மகள் அனு சத்யா (31). இவா், தனது அம்மா பிரேமாவின் பிறந்தநாளை கானத்தூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கொண்டாடினாா். இந்த கொண்டாடத்தில் அனு சத்யாவின் உறவினா்கள், நண்பா்கள் என பலா் பங்கேற்றனா். கொண்டாட்டத்தின்போது அனு சத்யாவும், அவா் தோழி சைலஜாவும் (29) அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தனா். அப்போது இருவருக்கும் நீச்சல் தெரியாததினால், நீச்சல் குளத்தின் ஆழமான பகுதிக்கு செல்லும்போது மூழ்கினா். இருவரது அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்தவா்கள் இருவரையும் மீட்டு ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அங்கு அனு சத்யாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். சைலாஜாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடா்பாக கானத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். தாய் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், மகள் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம், அவரது உறவினா்களிடம் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.