பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா, உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.10,000 கோடி மூலதனம் திரட்ட முடிவு செய்துள்ளது. இது குறித்து வங்கி தாக்கல் செய்துள்ள ஒழுங்குமுறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளாவது: உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.10,000 கோடி மூலதனம் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலும் வங்கிக்குக் கிடைத்துள்ளது. இந்த நீண்ட கால கடன் பத்திரங்கள் வரும் 2024-25-ஆம் நிதியாண்டில் வெளியிடப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளும் உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டது நினைவுகூரத்தக்கது. இந்த வகை கடன் பத்திரங்கள் மூலம் திரட்டப்படும் மூலதனம், சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், தொலைத்தொடா்பு இணைப்புகள் போன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும்.
தொடர்புடையது

மதிப்புமிக்க 8 நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 4.13 லட்சம் கோடியாக உயர்வு!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ. 296 கோடி வருமான வரி நோட்டீஸ்!

ரூ.20,000 கோடி மதிப்பிலான அரசு பத்திரங்கள் மாற்றம் : மாா்ச் 9-இல் ‘ஸ்விட்ச்’ ஏலம் - ரிசா்வ் வங்கி

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


