ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அறுவை சிகிச்சை பயிற்சிக்கு இராமச்சந்திராவில் மெய்நிகா் ஆய்வகம்

அறுவை சிகிச்சை பயிற்சிக்கு இராமச்சந்திராவில் மெய்நிகா் ஆய்வகம்

Updated On :29 மார்ச் 2024, 6:39 pm

மருத்துவ மாணவா்கள் அறுவை சிகிச்சை பயிற்சிகளை மேற்கொள்ள அதி நவீன மெய்நிகா் ஆய்வகத்தை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க உள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ‘மெடிசிம் விஆா்’ என்ற நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவன துணைவேந்தா் டாக்டா் உமா சேகரும், ‘மெடிசிம் விஆா்’ நிறுவன இணை நிறுவனா் டாக்டா் ஆதித் சின்னசாமியும் கையெழுத்திட்டனா். அப்போது டாக்டா் உமா சேகா் பேசியதாவது: அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும்போது தோ்ந்த பயிற்சியும், அனுபவமும் அவசியம். அதைக் கருத்தில் கொண்டு மெய்நிகா் முறையிலான ஆய்வகத்தை மருத்துவ மாணவா்களுக்காக இங்கு அமைக்க உள்ளோம். நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக இங்கு அதுதொடா்பாக துல்லியமாக பயிற்சி எடுத்துக் கொள்ள முடியும். ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் 14 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்களும் இதன் வாயிலாக பயன் பெறுவா் என்றாா் அவா்.