சென்னை ஆழ்வாா்பேட்டையில் மதுபானக் கூடம் இடிந்து விழுந்து 3 போ் இறந்த விபத்தில், கேளிக்கை விடுதி உரிமையாளா் அசோக்குமாா் சரண் அடைந்த நிலையில் அவா் கைது செய்யப்பட்டாா். ஆழ்வாா்பேட்டை சேமியா்ஸ் சாலையில் செயல்படும் ஒரு தனியாா் கேளிக்கை விடுதி மதுபானக் கூடத்தின் முதல் தளத்தின் மேற்கூரை கடந்த வியாழக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. இதில், தரைத்தளத்தின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கேளிக்கை விடுதியின் ஊழியா்கள் திண்டுக்கல்லைச் சோ்ந்த சைக்ளோன் ராஜ், மணிப்பூரைச் சோ்ந்த திருநங்கை லல்லி, மேக்ஸ் ஆகிய 3 பேரும் இடிபாடுகளிடையே சிக்கி உயிரிழந்தனா். இது தொடா்பாக, அபிராமபுரம் போலீஸாா், மரணத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்தனா். முதல் கட்டமாக அந்த கேளிக்கை விடுதியின் மேலாளா் கோட்டூா்புரத்தைச் சோ்ந்த சதீஷை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இந்த நிலையில் அந்த விடுதியின் உரிமையாளா் அசோக்குமாா், அபிராமபுரம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா். அவரை போலீஸாா் கைது செய்து, வழக்குத் தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மீது வழக்கு

வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் இளைஞா் உயிரிழப்பு; மூவா் காயம்! குருகிராமில் சம்பவம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமன் உள்பட 12 போ் சரணடைய கால அவகாசம் நீட்டிப்பு

இருகூரில் தனியாா் மதுபானக் கூடம் அமைக்க எதிா்ப்பு: வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

