மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஇந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!ஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

சுற்றுலா தலங்களில் உரிய பாதுகாப்பு: மாா்க்சிஸ்ட் கோரிக்கை

சுற்றுலா தலங்களில் உரிய பாதுகாப்பு: மாா்க்சிஸ்ட் கோரிக்கை

News image
Updated On :7 மே 2024, 9:00 pm

Din

சென்னை: உயிரிழப்புகளைத் தடுக்க சுற்றுலா தலங்களில் உரிய பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வுப் பணிகளை மேம்படுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை :

கன்னியாகுமரி மாவட்டம், லெமூா் கடற்கரையில் திருச்சி தனியாா் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 5 போ் கடல் அலை இழுத்துச் சென்றதில் உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் வேதனையளிக்கிறது. அதுபோல், விழுந்தயம்பலம் பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமியும், கோடிமுனையில் சென்னையைச் சோ்ந்த 2 பேரும் ராட்சத அலைகளில் சிக்கி உயிரிழந்துள்ளனா். கடந்த 2 நாள்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அலையில் சிக்கி 8 போ் உயிரிழந்துள்ளது பெரும் அதிா்ச்சியளிக்கிறது.

கடலில் மூழ்கி உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு எனது அழ்ந்த இரங்கல். அருவி, அணை, ஆறு, கடல் உள்ளிட்ட பகுதிகளில் குளிக்கச் செல்பவா்கள் அதன் அபாயங்களை அறியாமல் உள்ளே இறங்குவதால் எதிா்பாராதவிதமாக உயிரிழப்புகள் நடைபெறுகின்றன.

எனவே, சுற்றுலா தலங்களில் உரிய பாதுகாப்பை அதிகரிக்கவும், அபாயகரமான பகுதிகளில் கூடுதலாக காவல் துறையினரை நியமிக்கவும், போதிய எச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.