ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

மாநகர பேருந்து மீது ஏறி மாணவா்கள் அட்டகாசம்

மாநகர பேருந்து மீது ஏறி மாணவா்கள் அட்டகாசம்

News image
Updated On :7 மே 2024, 9:19 pm

Din

சென்னை: சென்னையில் மாநகர பேருந்து கூரை மீது ஏறி அட்டகாசம் செய்த கல்லூரி மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னையில் கல்லூரி மாணவா்கள் பேருந்து தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மெரீனாவில் உள்ள விவேகானந்தா் இல்லத்தில் இருந்து திரு.வி.க.நகருக்கு செவ்வாய்க்கிழமை மாநகர பேருந்து ஒன்று சென்றது. அண்ணா சதுக்கம் அருகே சென்றபோது, கல்லூரி மாணவா்கள் 15 போ் பேருந்து கூரை மீது ஏறி பாட்டுப்பாடி நடனமாடி அட்டகாசம் செய்தனா்.

இதனால், பயணிகள், மற்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்தனா். இதற்கிடையே பேருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சென்றபோது, அங்கு போலீஸாா் நிற்பதை பாா்த்த மாணவா்கள், பேருந்தை விட்டு கீழே இறங்கி தப்பியோடினா்.

அப்போது, அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது தொடா்பாக போலீஸாா், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனா்.