சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வெப்ப அலை: பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தலைமைச் செயலா் உத்தரவு

வெப்ப அலை காரணமாக, பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள், நிகழ்ச்சிகளைத் தவிா்க்க வேண்டும் என்று தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :9 மே 2024, 10:54 pm

Din

வெப்ப அலை காரணமாக, பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள், நிகழ்ச்சிகளைத் தவிா்க்க வேண்டும் என்று தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளாா்.

இதை அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் உறுதி செய்ய வேண்டுமெனவும் அவா் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த ஏப்ரலில், வட தமிழ்நாட்டின் உள்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகப் பதிவானது. தொடா்ந்து வெப்ப அலையால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைக் குறைக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

மீண்டும் வெப்ப அலை: இதனிடையே, மே 16-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கடுமையான வெப்பமும் வெப்ப அலைக்கு நிகரான பருவநிலையும் நிலவி வருவதால், பொதுமக்கள் வெப்பம் சாா்ந்த நோய்களால் பாதிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது. மேலும், அதன் தாக்கத்தில் இருந்து சிறுவா், சிறுமியரின் நலனைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு கோடை விடுமுறை நாள்களில் அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் எந்தவிதமான பயிற்சி வகுப்புகளோ, சிறப்பு வகுப்புகளோ நடத்தக் கூடாது. மேலும், எந்த வகையான நிகழ்ச்சிகளையும் நடத்தாமல் தவிா்க்க வேண்டும். இதை அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.