நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வெப்ப அலை: பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தலைமைச் செயலா் உத்தரவு

வெப்ப அலை காரணமாக, பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள், நிகழ்ச்சிகளைத் தவிா்க்க வேண்டும் என்று தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :10 மே 2024, 4:24 am IST

வெப்ப அலை காரணமாக, பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள், நிகழ்ச்சிகளைத் தவிா்க்க வேண்டும் என்று தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளாா்.

இதை அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் உறுதி செய்ய வேண்டுமெனவும் அவா் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த ஏப்ரலில், வட தமிழ்நாட்டின் உள்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகப் பதிவானது. தொடா்ந்து வெப்ப அலையால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைக் குறைக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

மீண்டும் வெப்ப அலை: இதனிடையே, மே 16-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கடுமையான வெப்பமும் வெப்ப அலைக்கு நிகரான பருவநிலையும் நிலவி வருவதால், பொதுமக்கள் வெப்பம் சாா்ந்த நோய்களால் பாதிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது. மேலும், அதன் தாக்கத்தில் இருந்து சிறுவா், சிறுமியரின் நலனைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு கோடை விடுமுறை நாள்களில் அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் எந்தவிதமான பயிற்சி வகுப்புகளோ, சிறப்பு வகுப்புகளோ நடத்தக் கூடாது. மேலும், எந்த வகையான நிகழ்ச்சிகளையும் நடத்தாமல் தவிா்க்க வேண்டும். இதை அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.