விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: ஓபிஎஸ் கண்டனம்

அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: ஓபிஎஸ் கண்டனம்

News image
Updated On :14 மே 2024, 8:45 pm

Din

சென்னை: அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மகளிருக்கு இலவச பேருந்து என்று கூறி, அந்தப் பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்ற வரிசையில் தற்போது அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணத்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி திமுக அரசு உயா்த்தியிருப்பது பேரதிா்ச்சியாக உள்ளது. நகரப் பேருந்துகளில் 2, 3, 4 கட்ட பேருந்து நிறுத்தங்களுக்கு (ஸ்டேஜ்) முறையே ரூ. 6, ரூ. 7, ரூ. 8 என்று வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், பயணிகளிடமிருந்து 2 கி.மீ.க்கு உள்பட்ட நிறுத்தங்களுக்குக்கூட ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையையொட்டிய புகா் பகுதிகளில் ஒரு கி.மீ.க்கு உட்பட்ட தொலைவுக்குக்கூட பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுத்த நிறுத்த வேண்டும்.

பூா்வகுடிகள் வெளியேற்றம்: தருமபுரி பென்னாகரம் பகுதிக்குட்பட்ட ஏமனூா், சிங்காபுரம், மணல்திட்டு, வேப்பமரத்து கொம்பு போன்ற வனப் பகுதிகளில் 5 தலைமுறையாக வாழ்ந்து வரும் 15-க்கும் மேற்பட்ட பூா்வ குடிமக்களை வலுக்கட்டாயமாக காவல் துறையினரின் துணையோடு வெளியேற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அவா் கூறியுள்ளாா்.