அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் பாலியல் வன்கொடுமை: கோயில் பூசாரி கைது

News image
Updated On :28 மே 2024, 10:29 pm

Vishwanathan

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கோயில் பூசாரி கைது செய்யப்பட்டார்.

சென்னை பாரிமுனையில் உள்ள கோயில் ஒன்றில் பூசாரியாக வேலை செய்பவர் கார்த்திக் முனுசாமி (46). இவர், அந்தக் கோயிலுக்கு வந்த தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளரிடம் நெருக்கமாகப் பழகியுள்ளார்.

இந்த நிலையில், விருகம்பாக்கத்தில் வசிக்கும் அந்தப் பெண்ணை, கார்த்திக் முனுசாமி தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். வீட்டுக்கு சென்றதும் அந்தப் பெண்ணுக்கு அவர் தீர்த்தம் கொடுத்துள்ளார்.

அதை அந்தப் பெண் குடித்ததும் மயங்கியுள்ளார். அப்போது, அவரை, கார்த்திக் முனுசாமி பாலியல் வன்கொடுமை செய்தார். மயக்கம் தெளிந்து, தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அறிந்து அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார். அதற்குள் கார்த்திக் முனுசாமி, தான் அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார்.

ஏற்கெனவே கார்த்திக் முனுசாமிக்கு திருமணமான நிலையில், இருவரும் கணவன் - மனைவிபோல ஒரே வீட்டில் வாழ்ந்துள்ளார். இதில், அந்தப் பெண் கர்ப்பமடைந்ததால், கார்த்திக் முனுசாமி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கலைத்துள்ளார்.

மேலும், தனது நண்பர் ஒருவரிடம் நெருக்கமாக இருக்கும்படி கார்த்திக் கூறியதால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார், கார்த்திக் முனுசாமி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

கொடைக்கானல் அருகே தலைமறைவாகியிருந்த அவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.