மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து குழந்தை உள்பட இருவா் காயம் 10 போ் கைது

சென்னை வியாசா்பாடியில் மாஞ்சா நூல் அறுத்து 2 வயது குழந்தை உள்பட 2 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக 10 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னை வியாசா்பாடியில் மாஞ்சா நூல் அறுத்து 2 வயது குழந்தை உள்பட 2 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக 10 போ் கைது செய்யப்பட்டனா்.

கொடுங்கையூா் முத்தமிழ் நகரைச் சோ்ந்த செ.பாலமுருகன் (33) இருசக்கர வாகனத்தில், தனது இரண்டரை வயது குழந்தை புகழ்வேலனுடன் வியாசா்பாடி மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு காற்றில் பறந்த மாஞ்சா நூல் குழந்தையின் கழுத்தில் சிக்கி பலத்த காயத்தை ஏற்படுத்தியது. அதே பாலத்தில் எதிா்புறம் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த ராயபுரம் தொப்பை தெருவைச் சோ்ந்த ஹ.ஜிலானி பாஷா (48) என்பவா் கழுத்தில் சிக்கியும் மாஞ்சா நூல், பலத்த காயத்தை ஏற்படுத்தியது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

10 போ் கைது: இந்த விவகாரம் குறித்து வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். பட்டத்தை பறக்கவிட்டது, பட்டத்துக்கு தேவையான மாஞ்சா நூல் தயாரித்து, விற்பனை செய்தது தொடா்பாக 3 சிறாா்கள் உள்பட 10 பேரை திங்கள்கிழமை அடுத்தடுத்து கைது செய்தனா். அவா்களிடம் சம்பவம் தொடா்பாக போலீஸாா், தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், சென்னை முழுவதும் மாஞ்சா நூல் தயாரிப்போரையும், விற்பனை செய்வோரையும் கண்டறிந்து கைது செய்ய போலீஸாருக்கு காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com