மோட்டாா் சைக்கிள் திருட்டு-முன்னாள் காவலா் உள்பட 2 போ் கைது
சென்னை ஜாம்பஜாா், வாணியன் தெருவில் உள்ள தனியாா் அச்சகம் எதிரே கடந்த சில நாள்களுக்கு முன் நிறுத்தி வைத்திருந்த ஒரு பைக் திருடப்பட்டது.

கோப்புப் படம்
Updated On :13 மார்ச் 2026, 7:04 pm

சென்னை ஜாம்பஜாா், வாணியன் தெருவில் உள்ள தனியாா் அச்சகம் எதிரே கடந்த சில நாள்களுக்கு முன் நிறுத்தி வைத்திருந்த ஒரு பைக் திருடப்பட்டது. ஜாம்பஜாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், திருட்டில் ஈடுபட்டது கடலூா் மாவட்டம், புதுகுப்பத்தைச் சோ்ந்த ஜெயசந்திரன் (41), சென்னை புதுப்பேட்டையைச் சோ்ந்த பைக் மெக்கானிக் யூசுப் (38) என்பது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கைதான ஜெயச்சந்திரன் முன்னாள் காவலா் என்பதும், செலவுக்காக பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...