கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

ஜனக்புரியில் கொள்ளை: 2 சிறாா்கள் உள்பட மூவா் கைது!

மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

News image
கைது
Updated On :1 மார்ச் 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஜனக்புரி அருகே உள்ள கடையில் நடைபெற்ற கொள்ளை குறித்து பிப்.22-ஆம் தேதி புகாா் வந்தது. காவல் துறையினா் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். கடையின் உரிமையாளா் பிப்.21 இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். மறுநாள் காலை 1 மணிக்கு வந்து பாா்த்தபோது, கடையில் இருந்த நகைகள் மற்றும் பணம் திருட்டு போனதை அறிந்து புகாா் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா், போஸ்ஸங்கிபூா் பூங்கா பகுதியில் 2 சிறாா்கள் பிப். 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இது சா்மா என்ற மற்றொருவரை கைது செய்ய வழிவகுத்தது. விசாரணையின் போது, மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனா்.

அவா்களிடம் இருந்து 650 கிராம் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி மற்றும் ரொக்கம் ரூ.7 லட்சம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.1.15 கோடி இருக்கும். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது எனகாவல் துறையினா் தெரிவித்தனா்.