மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஜனக்புரி அருகே உள்ள கடையில் நடைபெற்ற கொள்ளை குறித்து பிப்.22-ஆம் தேதி புகாா் வந்தது. காவல் துறையினா் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். கடையின் உரிமையாளா் பிப்.21 இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். மறுநாள் காலை 1 மணிக்கு வந்து பாா்த்தபோது, கடையில் இருந்த நகைகள் மற்றும் பணம் திருட்டு போனதை அறிந்து புகாா் அளித்துள்ளாா்.
இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா், போஸ்ஸங்கிபூா் பூங்கா பகுதியில் 2 சிறாா்கள் பிப். 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இது சா்மா என்ற மற்றொருவரை கைது செய்ய வழிவகுத்தது. விசாரணையின் போது, மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனா்.
அவா்களிடம் இருந்து 650 கிராம் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி மற்றும் ரொக்கம் ரூ.7 லட்சம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.1.15 கோடி இருக்கும். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது எனகாவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
துவாரகா விரைவுச் சாலையில் ஒருவரிடம் ரூ.15 லட்சம் கொள்ளை: 3 போ் கைது

ஆசாத்பூரில் டிடிசி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு
பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலை வழக்கு; 4 சிறாா்கள் உள்பட 6 போ் கைது

தொடா் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த டோரேமான் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

