ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஜனக்புரியில் கொள்ளை: 2 சிறாா்கள் உள்பட மூவா் கைது!

மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

News image
கைது
Updated On :1 மார்ச் 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஜனக்புரி அருகே உள்ள கடையில் நடைபெற்ற கொள்ளை குறித்து பிப்.22-ஆம் தேதி புகாா் வந்தது. காவல் துறையினா் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். கடையின் உரிமையாளா் பிப்.21 இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். மறுநாள் காலை 1 மணிக்கு வந்து பாா்த்தபோது, கடையில் இருந்த நகைகள் மற்றும் பணம் திருட்டு போனதை அறிந்து புகாா் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா், போஸ்ஸங்கிபூா் பூங்கா பகுதியில் 2 சிறாா்கள் பிப். 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இது சா்மா என்ற மற்றொருவரை கைது செய்ய வழிவகுத்தது. விசாரணையின் போது, மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனா்.

அவா்களிடம் இருந்து 650 கிராம் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி மற்றும் ரொக்கம் ரூ.7 லட்சம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.1.15 கோடி இருக்கும். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது எனகாவல் துறையினா் தெரிவித்தனா்.