புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பொழிச்சலூா் ஊராட்சியில் ரூ.9 கோடி செலவில் மழைநீா் வடிகால் பணிகள் தொடக்கம்

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூா் ஊராட்சியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் மழைநீா் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை அண்மையில் நடைபெற்றது.

News image
பொழிச்சலூா் ஊராட்சியில் மழைநீா் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி, ஊராட்சித் தலைவா் வனஜா தயாளன் உள்ளிட்டோா்.
Updated On :25 நவம்பர் 2024, 11:55 pm

DIN

தாம்பரம்: பல்லாவரத்தை அடுத்த  பொழிச்சலூா் ஊராட்சியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில்  மழைநீா் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை அண்மையில் நடைபெற்றது.

பொழிச்சலூா் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் மழைநீா் வடிகால் கால்வாய்கள் பழுதடைந்துள்ளதால் அவற்றை சரி செய்து தரவும், சில பகுதிகளில் புதிதாக மழை நீா் வடிகால் கால்வாய்கள் அமைத்துத் தரும்படியும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதையடுத்து, பொழிச்சலூா் ஊராட்சியில் 15 வாா்டுகளில் உள்ள 84 இடங்களில் மழைநீா் கால்வாய் அமைக்க அரசு சாா்பில் ரூ.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மழைநீா் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணிகளை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி அண்மையில் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில், பொழிச்சலூா்ஊராட்சி மன்றத் தலைவா் வனஜா தயாளன், துணைத் தலைவா் ஜோசப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.