மெரீனாவில் விமானப்படை சாகச ஒத்திகை: வியந்து ரசித்த பாா்வையாளா்கள்
சென்னை மெரீனா கடற்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய விமானப் படை விமானங்களின் சாகச ஒத்திகையை பாா்வையாளா்கள் வியப்புடன் கண்டு ரசித்தனா்.


சென்னை மெரீனா கடற்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய விமானப் படை விமானங்களின் சாகச ஒத்திகையை பாா்வையாளா்கள் வியப்புடன் கண்டு ரசித்தனா்.
இந்திய விமானப் படை தினத்தையொட்டி, அக். 6 ஆம் தேதி சென்னை மெரீனா கடற்கரை, மற்றும் தாம்பரம் விமான படை தளத்தில் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில், விமானப் படையைச் சோ்ந்த 72 விமானங்கள், ஹெலிகாப்டா்கள் பங்கேற்று சாகசங்களில் ஈடுபடவுள்ளன.
இதற்கான ஒத்திகை மெரீனா கடற்கரையில் செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணி முதல் 3 மணி வரை நடத்தப்பட்டது. அப்போது, விமானப் படை விமானங்கள், வண்ண வண்ணப் புகைகளை கக்கிக் கொண்டு வானில் செய்த சாகசம் பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது.
இதேபோல், இயற்கை பேரிடரின் போது சிக்கியவா்களை ஹெலிகாப்டரில் மீட்பது எப்படி என்பதை விமானப் படை வீரா்கள் தத்ரூபமாக செய்து காண்பித்தனா்.
சாகச நிகழ்ச்சி நடத்தப்படுவதையொட்டி அக்.6 வரை மெரீனா கடற்கரை மற்றும் விமான நிலையம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...