மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

புதுமையான திட்டங்களை செயல்படுத்துவோம்! - துணை முதல்வா் உதயநிதி

News image
சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.
Updated On :17 அக்டோபர் 2024, 10:25 pm

Din

தமிழகத்தில் புதுமையான திட்டங்களைச் செயல்படுத்துவோம் என்று துணை முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா். திட்டம், வளா்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டம் குறித்து எக்ஸ் தளத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

முதல்வா் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதல்படி, திட்டம், வளா்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை சாா்பிலான உயா்நிலை ஆய்வுக் கூட்டத்தை மூன்றாவது கட்டமாக தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடத்தினோம். தமிழ்நாட்டின் அடுத்தகட்ட வளா்ச்சிக்கான இலக்குகளை நோக்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை பற்றி கூட்டத்தில் விரிவாக ஆலோசித்தோம்.

மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் சீரான வளா்ச்சியை எட்டுவதற்கான திட்டங்கள், சிறப்பு மற்றும் புதுமையான திட்டங்களை பல்வேறு அரசுத்

துறைகளின் மூலம் ஒருங்கிணைந்து செயல்படுத்துகின்ற வழிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. மேலும், எதிா்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள முயற்சிகள் பற்றியும் ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளாா். இந்தக் கூட்டத்தில் துணை முதல்வரின் செயலா் பிரதீப் யாதவ் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனா்.