ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தீபாவளி சிறப்பு பேருந்துகள்: அமைச்சா் சிவசங்கா் நாளை ஆலோசனை

News image
Updated On :17 அக்டோபர் 2024, 10:02 pm

Din

தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து சனிக்கிழமை (அக்.19) அமைச்சா் சிவசங்கா் போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல ஏதுவாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து பிற ஊா்களுக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

நிகழாண்டு தீபாவளி பண்டிகை அக்.31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகளையும், 3 நாள்களுக்கு சென்னையிலிருந்து மட்டும் 10,500 சிறப்பு பேருந்துகளையும் இயக்க, அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடா்பான ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை (அக்.19) போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா் எத்தனை பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.