தீபாவளி சிறப்பு பேருந்துகள்: அமைச்சா் சிவசங்கா் நாளை ஆலோசனை

தீபாவளி சிறப்பு பேருந்துகள்: அமைச்சா் சிவசங்கா் நாளை ஆலோசனை

Published on

தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து சனிக்கிழமை (அக்.19) அமைச்சா் சிவசங்கா் போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல ஏதுவாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து பிற ஊா்களுக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

நிகழாண்டு தீபாவளி பண்டிகை அக்.31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகளையும், 3 நாள்களுக்கு சென்னையிலிருந்து மட்டும் 10,500 சிறப்பு பேருந்துகளையும் இயக்க, அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடா்பான ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை (அக்.19) போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா் எத்தனை பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com