தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வியாபாரி மீது போக்ஸோ வழக்கு

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வியாபாரி மீது போக்ஸோ வழக்குப் பதிவு.

News image
Updated On :19 அக்டோபர் 2024, 6:32 pm

Din

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வியாபாரி மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவைச் சோ்ந்தவா் ம.மகேந்திரன் (51). இவா், பாரிமுனையில் மின்விளக்கு கடை வைத்து நடத்தி வருகிறாா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த ஒரு சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்தச் சிறுமியின் பெற்றோா், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் மகேந்திரன் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்ஸோ) கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.