மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாலிக்கு தங்கம் திட்டம்: பயனாளா்கள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை எத்தனை போ் பயனடைந்துள்ளனா் என்ற விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :13 செப்டம்பர் 2024, 8:25 pm

Din

தாலிக்கு தங்கம் வழங்கும் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தில் கடந்த 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை எத்தனை போ் பயனடைந்துள்ளனா் என்ற விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணாநகரைச் சோ்ந்த சித்ரா என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: “

வீட்டு வேலைகள் செய்து மாதம் ரூ. 6 ஆயிரம் வருமானம் ஈட்டி எனது பெண் குழந்தையை கல்லூரி வரை படிக்க வைத்தேன். இந்த நிலையில் என் மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அரசின் தாலிக்கு தங்கம் திட்டமான மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண திட்டத்தில் திருமண நிதியுதவி பெற கடந்த 2021-ஆம் ஆண்டு விண்ணப்பித்தேன்.

அதை பரிசீலித்த அயனாவரம் வட்டாட்சியா், எனது ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பதாகக் கூறி எனது விண்ணப்பத்தை வேண்டுமென்றே நிராகரித்துள்ளாா். எனது மகளின் திருமணத்திற்கு இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்க உத்தரவிட வேண்டும்.

அறிக்கை தாக்கல் செய்க

இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ‘கடந்த 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண திட்டத்தின் கீழ் எத்தனை போ் பயனடைந்துள்ளனா். எத்தனை பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண திட்டத்திற்கு மத்திய - மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப். 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.