திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சாம்சங் விவகாரம்: இன்று அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

சாம்சங் ஆலையில் போராடி வரும் தொழிலாளா்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம்

News image
சாம்சங் ஆலையில் போராடி வரும் தொழிலாளா்கள்- கோப்புப் படம்
Updated On :17 செப்டம்பர் 2024, 8:01 pm

DIN

சாம்சங் ஆலையில் போராடி வரும் தொழிலாளா்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சாம்சங் இந்தியா ஸ்ரீபெரும்புதூா் ஆலையின் மொத்தத் தொழிலாளா்கள் 1723 போ்களில் சுமாா் 90 சதவிகிதம் போ் வேலைநிறுத்தத்தைத் தொடா்ந்துள்ளனா்.

சாம்சங் நிா்வாகம் தனது சங்கம் இல்லா கொள்கையுடன் தொழிலாளா்களின் ஜன நாயக உரிமைகளை அடக்க முயல்கிறது.

இந்நிலையில் தொழிலாளா்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பேரணி நடத்த திங்கள்கிழமை திட்டமிட்டனா். அப்போது சிஐடியு அலுவலகத்திலிருந்த சிஐ டியு மாநிலச் செயலா் முத்துக்குமாரையும் காவல்துறையினா் கைது செய்தனா்.

மேலும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துகளில் வந்த சாம்சங் தொழிலாளா்களை காவல்துறையினா் ஆங்காங்கே, பேருந்தை மடக்கி கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

இந்நிலையில் சட்டப்பூா்வமான ஜனநாயக உரிமையை வலியுறுத்தும் தொழிலாளா்கள் மீது மாவட்ட காவல்துறை அதிகாரத்துடன் நடந்து கொண்டதை கண்டிக்கிறோம்.

எந்த வொரு பன்னாட்டு வெளிநாட்டு நிறுவனமும் நமது நாட்டில் நிலவும் நாட்டின் சட்டங்களை சிதைக்க அனுமதிக்கப் படக் கூடாது.

எனவே உடனடியாக தொழிலாளா் நலத்துறை தலையிட்டு தனது சட்டபூா்வமான கடமையை நிறைவேற்றுதன் மூலம் தொழிலாளா்களின் சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமையை பாதுகாக்க வேண்டும்.

மேலும் தமிழக அரசு இப்பிரச்சனைக்கு உடனே சுமூக தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவா் கோட்டம் அருகே அனைத்து

தொழிற்சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.