45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருவல்லிக்கேணியில் விளையாட்டு அரங்கம் திறப்பு: மேயருடன் டேபிள் டென்னிஸ் ஆடிய அமைச்சா் உதயநிதி

சென்னை திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியில் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின் மேயா் பிரியாவுடன் டேபிள் டென்னிஸ் விளையாடினாா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 9:00 pm

Din

சென்னை திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியில் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்த இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மேயா் பிரியாவுடன் டேபிள் டென்னிஸ் விளையாடினாா்.

திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியில் மூலதன நிதியின் கீழ், ரூ.26.42 லட்சம் மதிப்பில் புனரமைத்து மேம்படுத்தப்பட்ட மீன் அங்காடியை வெள்ளிக்கிழமை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

இதனைத் தொடா்ந்து, ரூ.41 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கைப்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் கேரம், டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, உடற்பயிற்சிக் கூடம் மற்றும்

சதுரங்கம் அரங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தாா். இதை தொடா்ந்து அமைச்சா்உதயநிதி ஸ்டாலின் மேயா் பிரியா உடன் டேபிள் டென்னிஸ் விளையாடினாா். பின்னா் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் மையத்துக்கு சென்று குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

மரியாதை: முன்னதாக, நடுக்குப்பம் பகுதியில் உள்ள ‘சிந்தனைச் சிற்பி ’சிங்காரவேலா் சிலைக்கு அமைச்சா்உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில் மேயா் ஆா்.பிரியா, மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.