ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அக்.2-இல் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா விரைவு ரயில் ரத்து

சென்னை சென்ட்ரலில் இருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ராவுக்கு செல்லும் விரைவு ரயில் அக்.2-ஆம் தேதி ரத்து செய்யப்படவுள்ளது.

News image
Updated On :29 செப்டம்பர் 2024, 6:32 pm

Din

சென்னை சென்ட்ரலில் இருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ராவுக்கு செல்லும் விரைவு ரயில் அக்.2-ஆம் தேதி ரத்து செய்யப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து புதன்கிழமை (அக்.2) காலை 5.15 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ராவுக்கு செல்லும் விரைவு ரயிலும் (எண்: 16031) மறுமாா்க்கமாக அக்.4, 5 ஆகிய தேதிகளில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ராவில் இருந்து இரவு 10.25 மணிக்கு சென்ட்ரலுக்கு புறப்பட்டு வரும் ரயிலும் (எண்: 16032) முழுமையாக ரத்து செய்யப்படும்.

ஜபல்பூரிலிருந்து அக்.3-ஆம் தேதி மாலை 4.25 மணிக்கு மதுரை செல்லும் ரயிலும் (எண்: 02122), மதுரையிலிருந்து அக்.5-ஆம் தேதி காலை 6.15 மணிக்கு ஜபல்பூா் செல்லும் ரயிலும் (எண்: 02121) முழுமையாக ரத்து செய்யப்படும்.

அதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து அக்.1-ஆம் தேதி இரவு 10 மணிக்கு தில்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரயில் (எண்: 12621) விஜயவாடா, வாராங்கல், நாக்பூா் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக, சென்னை சென்ட்ரலில் இருந்து ரேணிகுண்டா, குண்டக்கல், வாடி, டௌன்ட், இடாா்சி வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.