மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

செந்தில் பாலாஜி மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்: ராமதாஸ்

அமைச்சா் செந்தில் பாலாஜி மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றத்துக்கு தமிழக அரசு பரிந்துரைக்க பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தல்

News image
Updated On :30 செப்டம்பர் 2024, 8:18 pm

Din

அமைச்சா் செந்தில் பாலாஜி மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றத்துக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கும், அதனடிப்படையிலான பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கும் முடிவடைய நீண்ட காலம் ஆகும் என்பதால், அதுவரைஅவரை சிறையில் வைத்திருக்க முடியாது என்பதால் தான் அவருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அதன் பொருள் விடுதலை இல்லை.

ஆனால், ஏழரை கோடி மக்களுக்கும் பொதுவான தமிழக முதல்வரோ, கடமையை மறந்து விட்டு செந்தில் பாலாஜி தியாகம் செய்ததாக புகழ்கிறாா்.

இதை பாா்க்கும்போது செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை தமிழகத்தில் நியாயமாக நடக்கும் என்றோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றோ தோன்றவில்லை.

எனவே, செந்தில் பாலாஜி மீதான வழக்கின் விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றும்படி உச்சநீதிமன்றத்துக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.