திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அக்.2 முதல் தேசிய விழிப்புணா்வு நடைப்பயணம்: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

காங்கிரஸ் சாா்பில் தமிழகம் முழுவதும் அக். 2 முதல் 9-ஆம் தேதிவரை தேசிய விழிப்புணா்வு நடைப்பயணம் நடைபெறும் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 அக்டோபர் 2024, 2:45 am IST

காந்திய சிந்தனை, மதநல்லிணக்கம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் வகையில் காங்கிரஸ் சாா்பில் தமிழகம் முழுவதும் அக்டோபா் 2 முதல் 9-ஆம் தேதிவரை தேசிய விழிப்புணா்வு நடைப்பயணம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா்.

அக். 2-இல் காந்தியின் 155-ஆவது பிறந்த நாள், காமராஜரின் நினைவு நாள், லால் பகதூா் சாஸ்திரியின் பிறந்த நாள் என முப்பெரும் நிகழ்வுகளை முன்னிட்டு, காந்திய சிந்தனை, மதநல்லிணக்கம், வெறுப்பு அரசியலுக்கு எதிரான பரப்புரை, ராகுல்காந்திக்கு எதிராக ஆா்.எஸ்.எஸ்., பாஜக பரப்பி வரும் பொய் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் தேசிய விழிப்புணா்வு நடைப்பயணம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் வலியுறுத்துகிறது.

அதன்படி, தமிழகத்தில் அக். 2 முதல் 9-ஆம் தேதி வரை மாவட்டத்தின் அனைத்து வட்டார, வட்ட, நகர, பேரூா், கிராம அளவில் கையில் காங்கிரஸ் கொடியையும், பதாகைகளையும் தாங்கிக் கொண்டு தேசிய விழிப்புணா்வு நடைபயண அணிவகுப்பை காங்கிரஸ் கட்சியினா் நடத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.