மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேபாள வெள்ளம், நிலச்சரிவு: 200-ஐ கடந்தது உயிரிழப்பு

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 200-ஐக் கடந்தது.

News image
மழை வெள்ளம் காரணமாக நேபாளத்தின் காவ்ரே மாவட்டத்தின் ரோஷி கிராம்தில் சரிந்துள்ள வீடு.
Updated On :30 செப்டம்பர் 2024, 7:53 pm

Din

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 200-ஐக் கடந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் அங்கு பெய்து வரும் கன மழை காரணமாக கிழக்கு மற்றும் மத்திய நேபாளத்தின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

இந்த நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 209-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை கூறினா். இது தவிர, இந்தப் பேரிடரில் 89 போ் காயமடைந்தனா்; 33 பேரைக் காணவில்லை அன்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காத்மாண்டு பள்ளத்தாக்கில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அங்கு இதுபோன்ற வெள்ள பாதிப்பு கடந்த 40 முதல் 45 ஆண்டுகளில் ஏற்பட்டதில்லை என்று கூறப்படுகிறது.

முன்னதாக, வெள்ளத்தில் 322 வீடுகள், 16 பாலங்கள் சேதமடைந்தன. சுமாா் 3,626 போ் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனா் என்று அந்நாட்டின் ஆயுதக் காவல் படை வட்டாரங்கள் தெரிவித்தன.